வெட்கித் தலைகுனியும் மதவெறி

16 பின்னூட்டங்கள்

வெட்கித் தலைகுனியும் மதவெறி
உலகெங்கும் மதத்தின் பெயரால் மதவெறி வளர்த்து வன்முறை, தூண்டி, கம்பு, கத்தி, கோடாறி, சூலம் மற்றும் வெடிகுண்டு மூலம் அப்பாவி மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சும் காட்டுமிரண்டிகளின் வெறியாட்டம் நடந்து வருகிறது. அதேவேளையில் மனித நேயம் இன்னும் இருப்பதை பறைசாற்றும் நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன.


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாமுண்டதேவி கோவிலில் நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு நடந்த பூஜயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 150 பக்தர்கள் மரணித்தனர். அந்த ’தள்ளுமுள்ளுக்கு’ - இஸ்லாமிய தீவிரவாதிகளின் வெடிகுண்டு புரளிதான் காரணம் என்று ஊடகம் மற்றும் இணைய தளங்களின் மூலம் வதந்தி மூலம் பரப்பட்டடு முஸ்லிம்களுக்கெதிரான துவேஷம் குறையாமல் மிககவனமாக பார்த்துக் கொள்ளப்பட்டது.

விபத்தில் சிக்கியவர்களை இடிபாடுகளிலிருந்து மீட்பதிலும், மீட்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிப்பதிலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதிலும், இரத்த தானம் வழங்குவதிலும் ஜோத்பூர் முஸ்லிம்கள் காட்டிய மனிதநேயம் வழக்கம்போல ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டது.

அது மட்டுமல்ல, உற்றார் உறவினரை இழந்து இந்து சகோதரர்கள் துக்கத்தில் தவிக்கும்போது, விமரிசையான நோன்பு பெருநாள் கொண்டாட்டம் முஸ்லிம்களுக்கு தேவையில்லை’ என்று ஜோத்பூர் நகர தலைமை காஜியும், பிற இஸ்லாமிய அமைப்புக்களும் அறிவித்தனர். அதனால் இந்த வருடம் நோன்பு பெருநாள் பண்டிகை - ’சடங்குக்காக’ மட்டும் கொண்டாடப்பட்டது.

நான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறேன். பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக, மதவெறி தூண்டி மக்களை கூறு போடும் வதந்திகளுக்கும் - திரிக்கப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு - ’மதம் தாண்டி’ உறவாடும் இத்தகைய மனித நேய நிகழ்வுகள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டு வருகிறதே என்று வருந்துவதால்தான் இந்தப்பதிவு.

தொடர்புடைய சுட்டி:





பெரியார் பார்வையில் இஸ்லாம் (அ) ஏகத்துவம்

7 பின்னூட்டங்கள்

(’இஸ்லாம்’ பற்றி பகுத்தறிவு கொள்கை கொண்ட பதிவர்கள் சிலரின் மதிப்பீடுகளை-பின்னூட்டங்களை தமிழ்மணத்தில் படித்துவிட்டு - பகுத்தறிவு தந்தையின் மதிப்பீடு என்னவென்று தேடியபோது கிடைத்ததை மீள்பதிவு செய்திருக்கிறேன்).

சகோதரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகி விட்டதால், அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு "மோட்ச லோகம்' கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, "கடவுளோடு கலந்து விட்டார்கள்' என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை. அன்றியும், ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை.
இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும், முமகமதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும், மதத்தின் காரணமாக கருதுவது மூடநம்பிக்கையே ஒழிய, இரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை. உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால், பாவபுண்ணியத்தையும், மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை.

மற்றென்னவென்று கேட்பீர்களேயானால், இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான மிருகப்பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.

அதாவது, மேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை "சாமி, சாமி, புத்தி' என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.

வண்ணான், நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும், கரடிபோல் மயிர் வளர்த்துக் கொண்டும், பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழவேண்டியதில்லை. இனி எந்த பொதுத் தெருவிலும் நடக்கலாம்; எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மத சம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போக தாராள உரிமை உண்டு; வேதம் படிக்க உரிமையுண்டு.

எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு விடுதலை அடைந்து விட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனெனில், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.

ஆகையால், தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கியவேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணியமானதுமான அபிப்பிராயம்.

நிற்க. சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?

ஆகையால், இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும்வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் முகமதியர் ஆவதைத் தவிர வேறு மார்க்கமில்லையாதலால், நாம் அதை ஆட்சேபிக்க முடியாதவர்களாய் இருக்கின்றோம். தவிரவும், மதத்தினிடத்திலோ இந்து சமூகத்தினிடத்திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால், அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கு இருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன்வரட்டும். அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறேன்.

நன்றி: http://www.keetru.com/rebel/periyar/12.php

ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்!

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.
(சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று தந்தை பெரியார் ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931) நன்றி: http://www.keetru.com/rebel/periyar/10.php



இனிய பெருநாள் வாழ்த்துகள்

1 பின்னூட்டங்கள்

பதிவர் சகோதரர்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துகள்..

நல்லறங்கள் நாடச் செய்து
தீமைகளிலிருந்து தடுத்து
மனித நேயம் தழைக்க செய்து
மனதில் மதவெறி அழித்து
மண்ணில் அமைதியுடன்
மக்கள் அனைவரும் வாழ

வல்ல இறைவனை

இறைஞ்சுகிறேன்..

மதவெறி கற்பித்தவன் முட்டாள்
மதவெறி பரப்புகிறவன் அயோக்கியன்
மதவெறி போற்றுகிறவன் காட்டுமிராண்டி

மதவெறி ஒழிப்போம்..
மனித நேயம் காப்போம்


முஸ்லிம்கள் Vs வினாயகர் ஊர்வலங்கள்

32 பின்னூட்டங்கள்



முஸ்லிம்கள் Vs வினாயகர் ஊர்வலங்கள்

வினை தீர்ப்பான் என்று இந்து நண்பர்களால் நம்பப் படுகின்ற வினாயகரின் பெயரால் - கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன.

எளிமைக்குப் பெயர் பெற்ற கடவுளாகச் சொல்லப் படும் இவர், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தபட்டவ்ர்களின் தரிசனத்துக்கு எட்டாத 'வந்தேறி'தெய்வங்களை போன்றவர் அல்ல. 'சாமான்யனின் தெய்வமாக' ஆலமர, வேப்பமர நிழலிலும் மற்றும் ஆத்தங்கரைகளிலும் வீற்றிருக்கும் 'புள்ளையாரை' முன்வைத்து முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகின்றன.

முன்பெல்லாம் வினாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் மாட்டுச் சாணம் அல்லது களிமண்ணால் சிறிய வினாயகர் வடிவங்களைப் பிடித்து அவற்றைக் கிணறுகளிலோ குளங்களிலோ வீசி எறிவர். வினாயகர் சதுர்த்தி என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் கொழுக்கட்டை கிடைக்கும் என்பதுதான்.

இன்றோ, தமிழகத்தில் 1985ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்துத்துவ வெறிக்கும்பல் நடத்தும் வினாயகர் சதுர்த்தி என்றாலே கலவரமும் வன்முறையும்தான் நினைவுக்கு வந்து திண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.

சுதந்திர போராட்டத்தின் போது, பாலகங்காதர திலகர், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி ஹிந்து-முஸ்லிம்களை ஒன்றிணைத்து, அவர்களிடையே நாட்டுப் பற்றை கொண்டுவர முயன்ற போது. அதில் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டார்கள் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு - தங்களின் இருப்பையும் இந்திய முஸ்லிம்களின் மீது வெறுப்பையும் காட்டுவதையே பிழைப்பாகக் கொண்ட மதவெறியர்களின் கையில் அப்பாவி வினாயகரும் 'துருப்பு சீட்டாக' சிக்கிக் கொண்டார்.

முஸ்லிம்களுக்கு எதிரான பகையை வளர்ப்பதற்கா எந்த வாய்ப்பையும் தவற விடாத ஹிந்துத்வ சக்திகள், கோட்ஸே என்ற சித்பவன பிராமனனால் மஹாத்மா காந்தி, படுகொலை செய்யப்பட்டபோது அதைத் திரித்து, "ஒரு முஸ்லிம்தான் காந்தியை படுகொலை செய்தான்" என்று வதந்தி பரப்பினார்கள். அந்தப் பழக்கம் இன்றும் தொடர்ந்து தென்காசியில், தங்களது சொந்த இந்து முன்னணி அலுவலகத்தில் 'வெடிகுண்டு' வைத்துவிட்டுப் பழியை அப்பாவி முஸ்லிம்கள் தலையில் போட்டுக் கலவரம் செய்ய முயன்று - இறுதியில் போலீசில் 'வகையாக சிக்கி' மூக்கை உடைத்துக் கொண்டது.

வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்வைத்து இந்த ஆண்டு சங்பரிவார் தனது கலவரத் திட்டத்தை - முத்துப்பேட்டை, திருவிதாங்கோட்டை, தக்கலை, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

'இஸ்லாமியர்கள் தங்களின் தெருவழியாக இந்துக் கடவுளர்களை தூக்கிச் செல்ல அனுமதிப்பதில்லை என்றும் "முஸ்லிம்களின் வசிப்பிடங்களின் வழியாக பன்றி போகலாம், கழுதை போகலாம், நாய் போகலாம் ஆனால் 'புள்ளையர் சிலை' போகக்கூடாதா?" என்று பொது மக்களை உசுப்பேத்தி விட்டு, வழக்கமாகச் செல்லும் வழியை விட்டுவிட்டு முஸ்லிம்கள் வசிப்பிடம் வழியாகத்தான் புள்ளையாரைத் தூக்கிச் செல்லவேண்டும் என்று மக்களைத் தூண்டி வருகிறார்கள். அந்தப் பொய்களை கேட்கிற எவருக்கும் இஸ்லாமியர்கள் வினாயகரை எதிர்க்கிறார்களே என்றே எண்ணத் தோன்றும்.

முஸ்லிம்களின் வசிப்பிடங்கள் வழியே பன்றிகள் போகும்போது, "பாபரின் வாரிசுகளே! பாகிஸ்தனுக்கு திரும்பி போங்கள்" என்று உறுமுவது கிடையாது. நாய்கள் போகும்போது, "துலுக்கனை வெட்டு; துலுக்கச்சியக் கட்டு" என்று குரைப்பது கிடையாது. கழுதைகள் போகும்போது, "பத்து பைசா முறுக்கு; பள்ளிவாசலை நொறுக்கு" என்று கனைப்பது கிடையாது. ஆனால் 'பக்த கோடிகளாக' வேஷமிட்டு, 'சோம பானம்' 'சுரா பானம்' அருந்தி, சுய நினைவில்லாமல் கூலிக்கு மாரடிக்கிற 'கேடிகள்' போடுகிற இஸ்லாமிய எதிர்ப்பு கோஷங்கள்தாம் முஸ்லிம்களைத் தங்களது வசிப்பிடங்களின் வழியாக 'வினாயகர் ஊர்வலம்' செல்வதை எதிர்க்கத் தூண்டுகிறது.

இஸ்லாமியர்களின் எதிர்ப்பு வினாயகருக்கோ ஹிந்து சகோதரர்களுக்கோ எதிரானது அல்ல. 'வினாயகர் ஊர்வலம்' என்ற போர்வையில் கலவரம் விளைவித்து, ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையைச் சீர்குலைத்து, முஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடத் திட்டம் போடும் ஹிந்துத்வ மதவெறி கும்பலுக்கு மட்டும் எதிரானது என்பதை மாற்றுமதச் சகோதரர்கள் நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், இதையும் வழக்கம்போல் திசை திருப்பி பொதுமக்களிடம் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வை வளர்கிறார்கள்

வினாயகர் சிலைகளைக் கரைக்க ஊர்வலமாகச் செல்பவர்கள் எவரும் மந்திரங்கள் சொல்லுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று தூக்கி செல்கிறவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மந்திரமே தெரியாது; அதற்குக் காரணம் உயர்சாதிக்கு மட்டும் சொல்வதற்குச் சொந்தமான மந்திரத்தைப் பிறர் காதால் கேட்க கூடாது; நாவால் உச்சரிக்க கூடாது, மீறினால் ‘ஈயம் காய்ச்சி ஊற்றப்படும்’ என்ற 'மனுதர்மத்தின்' அன்பான மிரட்டல்தான்.

ஹிந்து தர்மப்படி 'சூத்திரன்' 'மிலேச்சன்' என்ற முத்திரைகளோடு கோவிலுக்குள் நுழைய அருகதையற்றவர்களின் கைகளிள் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக 'சிலையை'த் திணிக்கிறது ஹிந்துத்வா.

வேதங்களால், தீண்டத்தகாதவர்களாக வரையறை செய்யப்படவர்களுக்குத் தற்காலிகமாக 'ஹிந்து' என்று முத்திரை குத்தி, முஸ்லிம்களுக்கெதிராகக் களமிறக்குகிறது ஹிந்துத்வா.

சாதி வேறுபாடு பாராட்டும் இந்துத்வாவின் இரட்டை வேடம் மக்கள் அறியாதது அன்று. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தபோது பின்னங்கால் பிடரியில் இடிபட, மூச்சு முட்ட 'ஹை கோர்ட்' 'சுப்ரீம் கோர்ட்' என்று அலைந்து -திரிந்து தடை வாங்கியது - ஹிந்துத்வ கும்பல்தான்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இந்து ஆதிக்கவாத சக்திகள் அத்துமீறும் போதெல்லாம் வாயையும் 'மற்றதையும்' பொத்திக்கொண்டு - காஷ்மீர் உயர் சாதி பண்டிட்களுக்காக 'குய்யோ' முறையோ' என்று ஒப்பாரி வைப்பதும் ஹிந்துத்வ கும்பல்தான்.

ஒவ்வொரு வருடமும் வினாயகர் ஊர்வலத்தின் போது பதட்டம்-கலவரம் ஏற்பட இத்தகைய கோஷங்கள்தான் காரணம் என்று - 'ஸ்காட்லாந்து' போலிசுக்கு இணையாகக் கருதப்படும் தமிழகக் காவல் துறைக்குத் தெரியாதா?

வினாயகர் சிலை கரைக்கப்படுவதால் நீர் நிலைகளில் தேக்கங்களில், ஆறு குளங்களில் ஏற்படும் மாசுகளைப் பற்றி கவலைப்படும் மத்திய-மாநில அரசுகள் - ஊர்வலம் மூலம் ஏற்படும் மதக்கலவரம் பற்றி கவலைப்படாது ஏன்?

நீர் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக - கரைக்கப்படும் சிலைகள் செய்யப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களைப் பற்றிய விதிமுறைகளில் காட்டப்படும் அக்கறையில் சிறிதுகூட ஊர்வலத்தால் பாதிக்கப்படும் சிறுபான்மையினர் நலனில் காட்டப்படாதது ஏன்?

சட்டமும் காவல் துறையும் என்ன செய்துகொண்டிருக்கின்றன? இழவுத் துறையாகிப் போன உளவுத்துறை போல் செயலிழந்து விட்டதா? அமைதியாக நடக்க வெண்டிய ஊர்வலத்தை - பதட்டம் நிறைந்ததாக மாற்றும் கயவர்கள் யார் என்று காவல் துறைக்குத் தெரியாதா? டிசம்பர் ஆறை முன்னிட்டு முன்னெச்சரிகை நடவடிக்கை என்ற பெயரில் முஸ்லிம்களைக் கைது செய்வதில் காட்டும் அக்கறையில் சிறிது கூட 'ஹிந்துத்வ' வினாயகர் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் மீது காட்டாதது ஏன்?

பிரச்சினைக்குத் தற்காலிக தீர்வுகள் வேண்டி 'பதட்டம்' நிறைந்த ஊர்களில் அனைத்து மதக்கூட்டம் போட்டும் ஹிந்துத்வ வன்முறையாளர்களின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களை நெறிபடுத்த சில வரைமுறைகளை அரசும்-காவல் துறையும் எதிர்காலத்தில் செய்யவேண்டும்:

  • ஊர்வலத்தில் கலந்து கொள்கிறவர்கள் மது அருந்தியிருக்கிறார்களா என்று பரிசோதனை செய்யப்படவேண்டும்.
  • ஊர்வலத்தில் கலந்து கொள்கிறவர்கள் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் போன்றவற்றைப் பதுக்கி வைத்திருக்கிறார்களா என்று பரிசோதனை செய்யப்படவேண்டும்.
  • முஸ்லிம்களின் வசிப்பிடங்கள வழியாக செல்லும் ஊர்வலங்களை 'வீடியோ' மூலம் படம்பிடிக்க வேண்டும்.
  • வெளியூர்காரர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது.
  • ஊர்வலத்தின் போது முழங்குவதற்கான கோஷங்களைக் காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும். அனுமதிக்கப்படாத கோஷங்களை எழுப்புவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவற்றைச் செய்யத் தவறினால் ஊர்வலத்தின்போது ஏற்படும் வன்முறை, பொருள் நஷடம், உயிர் இழப்பு ஆகியவற்றிக்குக் காவல் துறையே பொறுப்பேற்க வேண்டும். கடமையைச் செய்ய காவல் துறை தவறினால், மத நல்லிணகத்திற்குக் கேடு விளைவிக்க விரும்பும் சக்திகளைக் கட்டுப்படுத்த மேற்கண்ட நெறிமுறைகளை வலியுறுத்தி, சமூக அக்கறையுள்ள அமைப்புகள் பொதுநல வழக்கு தொடர்ந்து அரசின் கவனத்தை திருப்ப வேண்டும்.

நீதி மறுக்கப்பட்ட தமிழக முஸ்லிம்கள்

15 பின்னூட்டங்கள்




நீதி மறுக்கப்பட்ட தமிழக முஸ்லிம்கள்

தமிழகச் சிறைகளில் வாடுகிற தண்டனைக் கைதிகளில் எட்டாண்டுகாலம் சிறையில், முழுமையாய் தண்டனை கழித்தவர்களைப் 'பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு தொடக்கவிழா'வை ஒட்டி (செப். 15,2008) விடுதலை செய்ய இருப்பதையறிந்து மகிழ்ச்சியில் திளைத்தவர்கள் கோவையை சார்ந்த முஸ்லிம் தாய்மார்கள்.

கடந்த 10 ஆண்டு காலமாக, தலைவனை இழந்து தவித்த குடும்பம், மகனை இழந்த பெற்றோர், தந்தையின் முகம் மறந்த குழந்தைகள், என அனைத்து விதமான இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் உள்ளான இஸ்லாமியக் குடும்பங்கள் அல்லவா? அதனால் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் இனிப்பான செய்தியாக நம்பிக்கை கொள்ள வைத்தது.

1998இல் கருனாநிதி ஆட்சியின்போது கோயம்புத்தூரில், காவித்துறையின் எடுபிடியாக செயல்பட்ட காவல்துறை, அதன் கட்டுக்கடங்கா அத்துமீறல் மூலம் முஸ்லிம்களின் மனித உரிமைகளை நசுக்கியது. மதவெறி அமைப்புகளின் துணையோடு கோவை முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதரமே அழிக்கப்பட்டது. மனிதர்கள் உயிரோடு தீ வைத்துக் கொளுழுத்தப்பட்டனர். பல சகோதரிகள் மாணப் பங்கப்படுத்தப்பட்டனர். அவர்களின் வனிக நிறுவனங்களும் குடியிருப்புகளும் சூறையாடப்பட்டன. முஸ்லிம்களுக்கெதிரான அட்டூழியங்கள் எல்லை மீறி நடந்தபோது அரசின் சட்டம் கைக்கட்டி- கைக் கொட்டி நின்றது; காவல்துறை காவிகளோடு கைகோர்த்துக் கொண்டு கோவை முஸ்லிம்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது.

பாதிக்கப்ப்ட்டவர்கள் நியாயம் கேட்ட போது - காதுகளை பொத்திக்கொண்டது அரசு நிர்வாகம். வன்முறையாட்டம் ஆடிய, சட்டத்தின் மூலம் தண்டனை பெற வேண்டிய கொலைகாரக் காவிகள் வெகு சுதந்திரமாக வெற்றிக் களிப்போடு நடமாடினர். ஒரே நம்பிக்கையான நீதித்துறையாலும் புறக்கணிக்கப்படுகிறோமே என்று உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள் சிலர் நீதி கேட்டு 'வெடித்த' குண்டுகள் - 'பயங்கரவாத'மாக திரிக்கப்பட்டது.. பட்டாசு வெடித்தால்கூட முஸ்லிம்கள் மீது பொய்வழக்குப் போடக் காத்திருக்கும் காவல் துறை - வெடி குண்டு என்றால் விடுமா?. குற்றவாளிகளைத் தேடுகிறோம் என்று நள்ளிரவு நேரங்களில் கோவை முஸ்லிம்களின் வீட்டுக்கதவுகளை உடைத்துக்கொண்டு தேடியது, படுக்கை அறையிலிருந்து கக்கூஸ் வரை மூக்கை நுழைத்துப் பார்த்தது. இஸ்லாமிய வழிபாட்டிடங்கள், கல்விக்கூடங்கள் என்று அனைத்து இடங்களிலும் பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு தேடி முஸ்லிம்களை 'ஒசாமா பின் லேடனாக ' முத்திரை குத்தியது.

தீவிரவாதிகளைத் தேடுவதாக 'கோஷா' அணிந்த பெண்களையும் முதியவர்களையும் மிரட்டியது, முஸ்லிம்கள் வீட்டில் காய்-கறி நறுக்க வைத்திருக்கும் கத்திகள், ஷேவிங் செய்ய வைத்திருக்கும் பிளேடுகள் போன்றவைகளைக்கூட கைப்பற்றிப் 'பேரழிவு ஆயுதங்களாகப் ' பட்டியலிட்டு சமூகங்களிடையே பதட்டத்தை விளைவித்தது.

கோவையில் முஸ்லிம்களுக்கெதிரான கொடுமைகளை எதிர்த்த நடுநிலைவாதிகளின் குரல்கள் சங்பரிவாரால் நசுக்கப்பட்டன. நியாயம் கேட்ட இந்துச் சகோதரர்களைப் 'போலி சமயசார்பின்மைவாதிகள்' என்றும் 'இந்து மத விரோதி' என்றும் முத்திரை குத்தினர். அதனால் அப்பொழுது முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்ப முஸ்லிம்கள பயந்தது போல - இந்து நடுநிலைமைவாதிகளும் பயந்தனர்.

விசாரனை என்ற பெயரில் வீட்டில் படுத்துறங்கிக் கொண்டிருந்தவர்களை, கடைக்கு சாமான் வாங்கச் சென்றவர்களை, தெருவோரம் தூங்கிக்கொண்டிருந்த்வர்களை - பதின்ம வயதினர் - இளையர்-முதியர் என்ற பேதம் பார்க்காது அழைத்து சென்றது காவல்துறை.

பத்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. குற்றஞ்சாட்டப்பட்டட் பதின்மவயதினர் - இளைஞர்களாகி, இளைஞர்கள் முதியோராகி, முதியோர் 'மவுத்தா'க்கள் ஆகி விட்டார்கள்.

தமிழகச் சிறைகளில், கோவை வெடிகுண்டு வழக்குத் தீர்ப்பை ஒட்டி விடுதலைபெற்றுச் சென்றவர்களை தவிர, சுமார் 170 முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் பத்தாண்டுகளாகியும் பிணையில் விடுதலை செய்யப்பட்டதில்லை. தண்டிக்கப்பட்டவர்களுக்கு "பரோல்", "எஸ்கார்ட்" இல்லாத பரோல் போன்ற சட்டம் அனுமதித்த சலுகைகளும் முஸ்லிம்களுக்கு மட்டும் வஞ்சகமாக மறுக்கப்பட்டன. இவற்றை நினைத்து இன்றும் முஸ்லிம்களின் நெஞ்சில் கசிகின்ற இரத்தம் நிற்கவில்லை.

தாமதமாக வழங்கப்படும் நீதியை, மறுக்கப்பட்ட நீதியோடு ஒப்பிடுவார்கள்.(Justice Delayed is Justice Denied) அதனால் சிறுபான்மையினரின் காவலராகக் கூறிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதியிடமிருந்து காலந்தாழ்ந்தாலும் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்று நிர்க்கதியாய் நின்ற குடும்பங்களின் நம்பிக்கையைத் தூள் தூளாக்கி விட்டது தமிழக அரசு.

ஆயுள் தண்டனை பெற்ற முஸ்லிம் கைதிகள் மட்டும் எத்தனை ஆண்டுகாலம் சிறையில் கழிக்க வேண்டும் என்று சரியான விளக்கம் ஏதுமில்லை. முஸ்லிம் கைதிகள் மட்டும் 'ஆயுள் முழுவதும்' சிறையில் வாடவேண்டும்; அவர்களின் குடும்பத்தினர் எல்லோரும் காலம் முழுவதும் கவலையோடு வாட வேண்டும் என்று உணர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது அரசின் முடிவு. அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கோவை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 296 ஆயுள்தணடனைக் கைதிகளில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.

ஏன் இந்த பாகுபாடு?

கலைஞர் ஆட்சியில் சிறைச்சாலைகளில் முஸ்லிம்கள் எவரும் வாடவில்லை என்று பொய்த் தோற்றம் காட்டுவதற்கு அரங்கேற்றப்பட்ட நாடகமா இது? அல்லது வருகிற தேர்தலில் தி.மு.க தனிப்பெரும்பான்மையோடு வென்றால் எஞ்சியுள்ள 'முஸ்லிம் சிறைக்கைதிகளை' விடுதலை செய்வோம் என்று பிரச்சாரம் செய்வதற்காகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள பலி ஆடுகளா முஸ்லிம் கைதிகள்?

கோவை தொடர் குண்டு வெடிப்பிற்குக் காரணம் என்று, "அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கொடும் மதக் கலவரங்களில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுதான்" என்று அரசே சொன்னது. ஆனால் குண்டு வெடிப்பிற்கு அடிப்படைக் காரணமான மதக்கலவரக் குற்றத்தில் ஈடுபட்ட காவிகளில் காவல்துறைக் கறுப்பாடுகளில் பலர் கைதாகவே இல்லை. கைதான மிகச் சிலக் காவிகளில் ஒருவர்கூட இன்று சிறையில் இல்லை. எல்லோரும் அப்போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி?

கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில்,சுமார் 600 கைதிகள் விடுதலை செய்யப்பட்டபோதும் ஒருவர் கூட கோவை தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட முஸ்லிம்கள் இல்லை. இது குறித்து, பொது மன்னிப்பில் விடுதலையாக தகுதிகளை/வரையறைகளைக் கொண்டும் விடுதலை செய்யப் படாத ஜாஹிர் என்கிற கைதி தகவலறியும் சட்டத்தின் மூலம் காரணம் வினவியபோது, "அவர் புரிந்த குற்றத்தின் தன்மை கருதி 15-09-2007 அன்று வழங்கப்பட்ட பொது மன்னிப்பின்போது விடுதலை செய்யப்பட வில்லை" எனக் கூடுதல் சிறைத் துறை இயக்குனர் பதிலளித்தார். (மு.மு.எண்.51493/பி.எஸ்.1/2007-3 தேதி 26-12-2007). கலைஞர் அரசு செய்த அநீதிக்கு இந்த ஆண்டில் பரிகாரம் தேடிக்கொள்ள இருந்த வாய்ப்பையும் அரசு இழந்து, முஸ்லிகளுக்கு 'அல்வா' கொடுத்து அநீதி இழைத்து விட்டது.

தொப்பியோ முக்காடோ போட்டுக்கொண்டு 'நோன்பு கஞ்சி' குடிப்பதையும், யாருடைய பேச்சையும்-எழுத்தையும் வைத்தோ சிறுபான்மையினரின் நண்பராகக் காட்டி வேஷம் போட்டதை முஸ்லிம்கள் நம்பிய காலம் மலையேறிவிட்டது.

அது மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கான இயக்கம் என்ற பெயரில் 'இயங்காமல்'முடங்கிக் கிடக்கும் மற்றும் சகோதர இயக்கங்களை மட்டும் எதிர்த்து இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்புகளுக்கு எச்சரிக்கை செய்யும் நேரம் வந்து விட்டது.

இட ஒதுக்கீட்டையும், டிசம்பர் ஆறையும் தவிர தமிழக இஸ்லாமியர்களுக்கு வேறு பிரச்சினைகளே இல்லை என்று 'படம்' காட்டுவதை நிறுத்தச் சொல்லி, இஸ்லாமியர்களின் அடிப்படை வாழ்வுரிமை பற்றிய பிரச்சினைகளை முன்னெடுத்து அவற்றை எப்படித் தீர்ப்பது?, அதில் அரசின் பங்கென்ன?, சமுதாயத்தின் பங்கென்ன? என்ற செயல் திட்டத்தை வரையக் கட்டாயப் படுத்தும் காலம் வந்துவிட்டது.

நீண்டகாலமாக விசாரணை முடிக்கப்படாத முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை உடனடியாக முடிக்கவும் விசாரணைக் கைதிகளுக்கு ஜாமீன் உரிமை கோரியும் மறுபரிசீலனைக்குழு நியமிக்கப்படவேண்டிய வழக்குகளில் உடனடியாக அதைச் செய்யவும் வலியுறுத்தி, பல ஆண்டுகளாக - வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடும் குடும்பங்களை இஸ்லாமிய அமைப்புகள் காப்பாற்ற வேண்டும்.

அதற்கு முன்பாக அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்படும் கைதிகளின் பட்டியல் தேர்வுக் குழுவில் இடம் பெற்றவர்கள் யாவர்? எந்த வரையறையைக் கொண்டு கைதிகள் விடுதலையாகும் தகுதி நிர்ணயிக்கப் பட்டது? எட்டு ஆண்டுகள் எனக் கணக் கிட்டால் சுமார் 70 முஸ்லிம் கைதிகள் பொது மன்னிப்பிற்குத் தகுதியாக இருக்கும்போது, ஏன் ஒரு முஸ்லிம்கூட விடுதலை செய்யப்படவில்லை? என்ற நியாயமான வினாக்களை எழுப்ப வேண்டிய உரிமை சமுதாய அமைப்புகளுக்கும் - விடையளிக்க வேண்டிய கடமை ஆளும் அதிகார வர்க்கத்துக்கும் உள்ளது.

வினாக்கள் எழும்புமா? விடைகள் வெளிவருமா?

மதவெறி அழிப்போம்..

0 பின்னூட்டங்கள்



பழிக்கு பழி வாங்குவதாக சொல்லி டெல்லியில் கடந்த சனியன்று (13 செப் 2008) 30 அப்பாவிகளை மதச்சாயம் பூசிய சில மிருகங்கள் வெடிகுண்டு மூலம் படுகொலை செய்தது - அடிப்படை மனித நேயத்திற்கு முரனானது. வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.

கொலைகாரர்களும்-கயவர்களும் ஹிந்து-முஸ்லிம் சாயம் பூசிக்கொண்டு கோழைத்தனமாக அப்பாவி பொதுமக்களை கொல்வதை உடனடியாக தடுக்கவேண்டும். அரசு மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டனர் பொதுமக்கள்.

சுதந்திரமடைந்ததிலிருந்து மும்பை, மீரட், மாலியானா, கோயம்புத்தூர், குஜராத், ஒரிஸ்ஸா என்று ஒவ்வொரு இடத்திலும் நடந்த படுகொலைகளிலிருந்து கலவரம் உருவாக அடிப்படையான காரணங்கள் என்னவென்று தெரிந்தும் - அதை களைய மறுத்த புறக்கணித்ததுதான் தேசமெங்கும் குண்டுகளாய் வெடித்து பரவுகிறது.

அப்பாவிகளைக் கொல்லும் மனித நேயமற்ற குரூரமான குண்டு வெடிப்புகள்-திட்டமிட்ட கலவரங்கள் இவற்றின் அடிவேரை ஆராய்ந்து குற்றவாளிகளைக் கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட அத்தனை கமிஷன்களும் பொது மக்களின் வரிப்பணத்தில், அமல் செய்யப்படாத வெற்று அறிக்கைகளைத்தான் தயாரித்து போட்டன.

தீவிரவாதத்தை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டு ஒரு சாரருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது - தீவிரவாதத்தையே அதிகரிக்க செய்தது.

அரசு மத தீவிரவாதத்தை ஒழிக்கும் என்று இனிமேலும் நாம் நம்பிக் கொண்டிருக்கலாமா?

’எல்லை தாண்டிய தீவிரவாதம்’ என்ற கூப்பாடினாலோ அல்லது ’இஸ்லாமிய பயங்கரவாதம் ’ என்ற குற்றச்சாட்டினாலோ அழியாது மதவெறி..

‘பதிலடி’ என்ற சப்பைக்கட்டுடன் அரங்கேற்றப்படும் மனிதப்படுகொலைகளை கண்டு ’ஐயோ பாவம்’ என்று ’உச்சு’கொட்டிவிட்டால் பறிக்கப்பட்ட மனித உயிர்கள் திரும்ப வராது..

குற்றவாளிகள் இரும்புகரம் கொண்டு தண்டிக்கப்படவேண்டும்- அதற்கேற்ற சட்டம் வேண்டும் என்ற அரசியல் கலந்த அலங்கார முழக்கங்களோ சடங்குக்காக நடத்தப்படும் கண்டனப் பேரணிகளோ எதையும் சாதிக்காது..

அப்படியென்றால், மதத்தின் பெயரால் நடக்கும் படுகொலைகளுக்கு-அட்டூழியங்களுக்கு முடிவே இல்லையா?

மத்திய-மாநில அரசுகள் இத்தனை ஆண்டுகளாக செய்யத் தவறியதை இப்பொழுதிலிருந்து கடைப்பிடிக்க ஆரம்பித்தால் - மதவெறி ஒடுக்கப்படலாம், மனித உயிர்கள் காக்கப்படலாம்.

காவ்ல துறையும் நீதித்துறையும் - சாதி-மத சார்பின்றி, அரசியல் வாதிகளின் இடையூறின்றி இனியாவது செயல்படவேண்டும்.

உளவுத்துறை- காவல் துறை இவைகளின் தொழில் நுட்பம் மற்றும் ஆயுத நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். எந்த இடத்திலாவது தவறு நடந்தால் அவர்களைத்தான் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும்.

காவல் துறை - பொது மக்களுக்கு நன்மை செய்து - நம்பிக்கை தரும் நன்பனாக மாறவேண்டும், பாரபடசமில்லாத அவர்களின் செயற்பாடுகளால் பொதுமக்களை குறிப்பாக ‘குற்றப்பரம்பரையாக’ சுட்டப்பட்ட ச்முதாய மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும்.

தேசம், தேசியம் என்ற போலி வார்த்தைகள், வதந்திகள், மற்றும் வரலாறு திருத்தங்கள், மூலம் மக்களை கூறுபோடும் மதவெறி அமைப்புகள் தயவு தாட்சன்யமின்றி நசுக்கப்படவேண்டும்.

மத்திய-மாநில அரசுகளின் நீதி மற்றும் காவல் துறையினர் தங்களின் கடமைகளை பாரபடசமின்றி செய்தால் தீவிரவாதிகள் அந்தந்த சமுதாயத்தை சார்ந்தவர்களாலேயே புறக்கணிகப்பட்டு, மனித நேயத்திற்கு புறம்பான செயல்களை கைவிட்டு இத்தகைய குரூரமான செய்லகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க் வாய்ப்புண்டு.

மத்திய-மாநில அரசுகள் இத்தனை ஆண்டுகளாக செய்யத் தவறியதை இப்பொழுதிலிருந்து கடைப்பிடித்தேயாக வேண்டும், இல்லையென்றால், தீவிரவாத செயல்களும், உயிரிழப்புகளும், கதைக்கு உதவாத வெற்று ’கமிஷன்களும்’ ‘கண்டன பேரணிகளும்’ முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் - மனித உயிர்களற்ற பாலைவனமாய் இந்தியா மாறும் வரை...

மதவெறி அழிப்போம்..மனிதநேயம் காப்போம்.

தினமலருக்கு புத்தி புகட்டுவோம்

3 பின்னூட்டங்கள்

மதவெறி வளர்த்து - மனித நேயம் சிதைப்பதையே வயிற்றுப் பிழைப்பாக கொண்ட 'தினமலர்' தமிழக இஸ்லாமியர்களின் உணர்ச்சி மிக்க எதிர்ப்பையும்- எழுச்சி மிக்க போராட்டத்தையும் கண்ட பிறகும் தன்னுடைய தவறை உணர்ந்து இதுவரை மனமார மன்னிப்பு கோரவில்லை ஆனால், முஸ்லிம்களின் ஆத்திரத்தை குறைக்க என்ன வழியென்று மட்டும் 'சாணக்யத்தனமாக' யோசித்து, சடங்குக்காக வருத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறது.

'தினமலர்' மனமார மன்னிப்பு கேட்டு விட்டதாக - திட்டமிட்டு ஒரு வதந்தியை இஸ்லாமிய மின்னஞ்சல் குழுமங்களில், வலைப்பூக்களில் மற்றும் இணையதளங்களில் உலாவ விட்டு - முட்டாளாக்கி, முஸ்லிம்களின் எதிர்ப்பை ‘மழுங்கடிக்க' முயற்சி செய்து வருகிறது। தினமலரின் இந்த நாடகத்தை - உண்மையென் நம்பி, சாத்வீகமான முறையில் முஸ்லிம்கள் தற்போது தெரிவித்து வரும் எதிர்ப்பை நிறுத்திவிடக்கூடாது।

மதவெறி தூண்டும் தினமலரின் - வக்கிரபுத்தியை உலக நாடுகளுக்கு எடுத்தியம்பி, அந் நாடுகளின் சட்டம் அனுமதித்திருக்கும் வழியில் 'தினமலர்' இணையதளத்தை தடைசெய்ய அதன் இறக்குமதியை தடை செய்ய தற்போது முஸ்லிம் சகோதரர்கள் எடுக்கும் முயற்சிகளை நிறுத்திவிடக் கூடாது.

தமிழக முஸ்லிம்களை ‘கிள்ளுக்கீரையாக' நிணைத்துக் கொண்டிருக்கும் - தினமலருக்கு, நாம் உலகெங்கும் பரந்து-படர்ந்து விழுது விட்டு ஓங்கி நிற்கும் ஆலமரம் என்று நிரூபிக்க வேண்டும்।

நமது சகோதரர்கள எடுக்கும் நடவடிக்கைகள் 'தினமலரு'க்கு புத்தி வரும் வரை அல்லது பொருளாதர நஷ்டம் வரும் வரை தொடரவேண்டும்। அதற்காக நாம் கீழ்கண்ட ஐந்து விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். ...


1. நமது நடவடிக்கைகளின் மூலம் 'தினமலருக்கு' உண்மையில் புத்தி வந்ததா என்று கூர்ந்து கவனிக்க வேண்டும்.
2. எதிர்பார்த்த மாற்றம் உண்மையிலேயே ஏற்பட்டால் - அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன என்றும்
3. மாற்றம் ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து அதற்கான
4. வழிமுறைகளை ஒருங்கிணைத்து - அந்த வழிமுறைகளை எப்படி பின்பற்ற வேண்டும் என்று ஒரு செயல் திட்டத்தை (Action Plan or Plan of Actions) உருவாக்க வேண்டும்
5। அந்த திட்டத்தை - நிறைவேற்ற ஆர்வமுள்ள சகோதரர்களை உள்ள்டக்கிய சிறு சிறு குழுக்களை அமைத்து பொறுப்புக்களை பகிர்ந்தளிக்க வேண்டும்.


இயக்க விலங்கை உடைத்து - குழு மணப்பான்மையை தகர்த்து அனைவரும் இஸ்லாமியர்களாக ஒன்றிணைந்தால் மதவெறி வளர்க்கும் ‘வந்தேறிகளை' வந்த வழியே திருப்பி அனுப்பிவிடலாம்..இன்ஷா அல்லாஹ்

இந்துத்வம்: சர்வ சாதி சம்மததுவமா?

3 பின்னூட்டங்கள்

கட்டுக்கதைகளை மட்டும் அடிப்படையாக கொண்ட தங்களின் கட்டுரையை படித்தேன். 'எம்மதமும் சம்மதமே ' என்கிறார்களாம் இந்துக்கள். அவர்களிடம் 'எச்சாதியும் சம்மதமா ? 'என்று வினவினால், 'இல்லவே இல்லை ' என்ற குரல்தானே ஒங்கி ஒலிக்கிறது! தன்மதத்தை சார்ந்த பிற சாதியினரையே சம அங்கத்தினராக கருதாத உங்களால் எப்படி பெருந்தன்மையாக எம்மதமும் சம்மதம் என கூறமுடிகிறது. சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத 'எம்மதமும் சம்மதம் ' என்ற தொடர் எதுகை-மோனைக்காக போடப்பட்டதா?.
இஸ்லாமும் இந்துமதமும் ஒன்றா? விவரங்களுக்கு
ஒரு வாதத்திற்காக 'எம்மதமும் சம்மதம் ' என்று வைத்துக்கொண்டால் இஸ்லாமும் இந்துமதமும் ஒன்றா? கடவுளுக்கு உருவம் கிடையாது, கடவுள் ஒருவரே, அவரை அரூபன் என்கிற ஒரே ஒரு கொள்கையில்தான் இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருக்கிறது. ஆனால் இந்து மதத்தால் போற்றப்படும் சாதி வேறுபாடு, மறு ஜென்மம், நடைமுறை பல உருவ வழிபாடு போன்றவைகளில் அனுவளவும் ஒற்றுமை கிடையதே!
அவ்வாறு முடிச்சுப்போடுவது பெருந்தன்மையினால் என்றால், சமீப காலத்தில் இந்தியாவில் இருக்கிற அனைவரும் (முஸ்லிம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் பிற மதத்தினர்) 'ஹிந்துக்கள் ' என்று தங்களை அடையாளப்படுத்தி அழைக்கவேண்டும் என்று காவி கும்பல் அடிக்கடி கூப்பாடு போட்டுவருகிறதே ? இந்த கோஷத்தை 'வீரத்துறவி' இராமகோபலனிலிருந்து 'இரும்பு மனிதர் அத்வானி ' வரை எதிரொளிக்கிறார்களே?
'வெறித்தனமான மதப்பற்று இந்துக்களிடம் கிடையாது என்பது வரலாற்று உண்மை ' என்று நரித்தனமாக இரண்டு அம்பட்டமான பொய்களை ஒரே வரியில் எழுதியிருக்கிரீர்களே! மதுரையில், மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில், ஜைன மதத்தை சார்ந்த ஏறக்குறைய 8000 பேர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே அது ஏன்? (http://www.themronline.com/200403m1.html/ The Modern Rationalist, March 2004).

'அதீத மதப்பற்றுள்ளவர்கள் ' என்ற அடைமொழியை யாருக்கு தந்திருக்கிறீர்கள் தெரியுமா? பாதிரியார்களையும் பாலகர்களையும் கொன்ற கொடியவர்களுக்கும், கண்ணியஸ்த்ரிகளை மானப்பங்கம் செய்த கயவாலிகளுக்கும்.
தெரு முனைகளிலும் பஸ் நிறுத்தங்களிலும் நின்றுகொண்டு வாய்கிழிய கத்தி 'பாவிகளை ' பரிசுத்தவான்களாக்கப் போவதாக 'பூச்சாண்டி ' காட்டுகிறவர்களுக்கும் - தன் ஆதிக்கத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் அவர்களிடம் ஓடிப்போய்விட்டால் இந்து மதக் கூடாரமே காலியாகி விடுமே என்று அவசரமாய் 'மதமாற்றத்தடை சட்டம் ' கொண்டு வந்தவர்களுக்கும் - அதை வரவேற்று அகில இந்தியாவிலும் அமல் படுத்த வேண்டுமென்று கூச்சல் போடுவபவர்களுக்கும் வேறுபாடு இல்லை.

பிற மதங்களை அவதூறாக பேசுவதோ, பழிப்பதோ கிண்டல் செய்வதோ இந்துக்களின் இரத்தத்தில் கிடையாதாம் - அப்படியென்றால், இந்துக்களில் பெரும்பான்மை பிரிவினரை 'தீட்டுள்ளவர்களாக ' 'தீண்டத்தகாதவர்களாக ' மதரீதியாக அறிவித்ததை எதில் சேர்ப்பது ? அன்று போட்ட விதைதானே 21 ஆம் நூற்றாண்டில் கூட கோவிலின் கருவறைக்குள் உயர்சாதியினரை தவிர பிற சாதியினர் நுழைய, பூசை செய்ய தடையாக உள்ளது. அரிஜனப்பிரிவை சார்ந்தவர்களும் அர்ச்சகராகலாம் என்று அரசு சட்டம் செய்தால் கூட அதற்கு இந்து தர்மம் (!) இடம் தரவில்லையென்ற சிறுபான்மை உயர்சாதியினரின் வாதம் வலிமையாக ஒலிக்கிறதே?

வர்னாஷிரமத்தை 'ஆக்சிஜனாக'க்கொண்டு 'மாடு மேய்க்கிறவன் பரம்பரை மாடு மேய்த்துக்கொண்டிருக்கவேண்டும் அவர்கள் வேதம் ஓதக்கூடாது ' என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கும் அயோக்கியர்களுக்கு ' (http://www.thinnai.com/pl0415042.html) அபிஷேகம் செய்யும் அதிசயம் நடப்பது இந்த சனாதான மதத்தில்தானே!.

விலங்குகளின் மூத்திரத்திற்கும் சாணத்திற்கும் கொடுக்கும் மரியாதையை கூட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மனிதர்களுக்கு அளிக்காமல் அவர்களை தீட்டுள்ளவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் அழைத்துவிட்டு! 'பாவிகள்' என்று பிறர் அழைத்ததற்காக பொங்கியெழுவது போல் நடித்து - சிண்டு முடியும் உங்களை குழப்பவாதி என்று அழைப்பதுதான் தகும். பண்பாடு அற்றவர்கள் யார்? கோடிக்கனக்கான பூர்வீககுடிமக்களை சூத்திரர்கள், சண்டாளர்கள் என்று அழைத்த 'புனித பூநூலர்களா' அல்லது 'பாவிகள்' என்று அழைப்பவர்களா?

மற்ற மதங்களின் தொழுகைத்தளங்களில் திட்டம்போட்டு கள்ளத்தனமாக இரவோடிரவாக சிலைகளை புதைத்து வைத்துவிட்டு அந்த இடம் முன்னாள் இந்து வழிபாட்டிடம் தான் என்று 'உயர் சாதியினரை' முதலாளிகளாகவும், ஆசிரியர்களாகவும் கொண்ட பத்திரிக்கைகளிலும் இணையத்தளத்திலும் வதந்தீக்களை பரவவிட்டு பதட்டம் விளைவிப்பது யார்?
சென்னை தியாகராய நகரில் பள்ளிவாசலுக்கான இடத்தில் திடீர் பிள்ளையார் எவ்வாறு முளைத்ததோ அவ்வாறே பாப்ரி மஸ்ஜிதில் 'ராமர் சிலை' வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். உண்மை தெரிந்து மூக்குடைப்பட்டு 'பிள்ளையார் சிலையை' தூக்கிக்கொண்டு ஓடியது போல், பாபர் மஸ்ஜிதிலிருந்து 'ராமர் சிலையை' தூக்கிக்கொண்டு ஒடும் காலம் வெகு விரைவில் வரும்.

இதே வழிமுறையில்தானே காசி, மதுரா மற்றும் ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்களை இந்திய முஸ்லிம்களிடமிருந்து அபகரிக்க RSS/VHP கும்பலால் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியாதா. இந்த நிகழ்வுகளை கண்டித்து எழுதினால் மட்டும் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணுவதுதான் உண்மையான சனாதன மதத்தின் அடையாளமா?
இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கும்போதே, 'நடமாடும் தெய்வம்' காஞ்சி சங்கரரை கொண்டு சமாதானம் முயற்சி செய்வதுபோல் நாடகம் போட்டுக்கொண்டே, 'இலவச சூலவழங்கிகள்' மூலம் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று 'சவடால்கள் ' விடுவதுதான் சனாதான தருமத்தின் லட்சனமா?
விவேகனந்தரின் கருத்துக்களை பேசிய பிரதமர் வாஜ்பாயின் 'அதே வாய் ' தான் கூட்டனியின் தேர்தல் அறிக்கையில் விலங்குகளான பசுக்களுக்கு அளிக்கும் உத்திரவாதத்தை கூட கோடிக்கணக்கான இந்திய முஸ்லிம் சிறுபான்மையினர் அவர்களின் அடையாளத்தை பாதுகாக்கும் தனியார் சட்டத்தை பின்பற்றும் உரிமையை அளிக்க மறுக்கிறது. பொது சிவில் சட்டம் பற்றி வாயும், மற்றதும் கிழிய பேசிவருபவர்கள், முதலில் இந்துக்களுக்காக 'பொதுப்பூனூல் சட்டம்' கொண்டுவந்து இந்துக்களான ஆதி திராவிடர்களையும் அந்தனர்களையும் சமமாக்க வேண்டியதுதானே!

மன முதிர்ச்சியற்ற(!) கற்கால மனிதர்களுக்குக்காக சலுகை செய்தே குறுங் கடவுளர்களின் மற்றும் பெருங்கடவுளர்களின் எண்ணிக்கை இந்து மத வழிபாட்டில் மலிந்துவிட்டது என்ற தங்களின் உண்மை கூற்றை நானும் ஏற்கிறேன். நீங்கள் வேண்டுமானால் 'நட்ட கல்லெல்லாம் கடவுள்; கடவுள் நம்பிக்கையுள்ள கதாசிரியர்களின் கதையெல்லாம் புராணங்கள்; புராணங்களில் வரும் பாத்திரங்கள் எல்லாம் தெய்வங்கள்' என்ற கொள்கையை கடைபிடியுங்கள். அதற்காக உங்களால் வணங்கப்படும் அனைத்து 'கற்பனை' தெய்வங்களையும் நியாயப்படுத்துவதற்காக - இந்திய இஸ்லாமியர்களுக்கு சொந்தமான இடங்களில் 'ஜென்ம பூமிகளை' உருவாக்க முயற்சிக்கிறீர்களே?

'எந்த பிற மதத்தவர் இதுவே எங்கள் கடவுள் என்று எதைகூறினாலும், இந்துக்கள் அதை மதித்து ஏற்பார்களாம்' - பிறரின் கடவுள்களை மட்டும் ஏற்றுக்கொண்டு அந்த மதம் வலியுறுத்திய கொள்கைகளை விட்டுவிட்டு எம்மதமும் சம்மதம் என்று வெற்று வசனங்கள் பேசிப்பயன் என்ன?
உதாரணமாக, ஜாதி வேறுபாடு கூடாது. பிறப்பு அடிப்படையில் பேதம் காணக்கூடாது என்ற இஸ்லாமிய மதக்கொள்கைகளை நடைமுறையில் ஏற்றுக்கொள்ளாமல் 'ஈஸ்வரையும் வணங்குவோம் அல்லாவையும் வணங்குவோம்' என்று கூறுவது சரியா?

அடுத்த குற்றச்சாட்டு 'முகலாயர்கள் இந்துக்களின் கோவில்களை இடித்தார்கள்: கொள்ளையடித்தார்கள்' - கோவிலின் பெயரில் கொள்ளையடித்து பரம்பரை பரம்பரையாக வயிறு வளர்த்தவர்கள் யார் என்பது 'மன முதிர்ச்சியடைந்த' அனைவருக்கும் தெரியும்? மிகச்சமீபத்தில், புகழ்பெற்ற திருப்பதி வைனவ ஆலயத்தை சூரையாட திட்டம் திட்டியது 'கஜினி முகம்மது' அல்ல - சாட்சாத் காஞ்சி பெரியவர் சங்கரர்தான் என்பது உங்களுக்கு தெரியாதா? இந்திய மக்களில் பெரும்பான்மையினரின் தரிசனத்து எட்டாத, பிறசாதி சாமான்யனுக்கு பிரசாதம் கூட கிட்டாத, உயர்சாதியினரின் ஆதிக்கத்தில் இருந்து- பிற சாதியினரின் வாயிலும் வயிற்றிலும் அடித்து குறிப்பிட்ட சாதியினருக்கு வருவாய் ஈட்டிதந்த கோயில்கள் இருந்தாலென்ன இடிந்தாலென்ன என்றுதான் முகலாயர்கள் இடிக்கும்போது பெரும்பான்மை இந்து மக்கள் அமைதியாக இருந்து விட்டார்கள்.!

அது யார்?
கொள்ளையடிக்க வந்த முகலாய மன்னர்களுக்கு தன் மதத்தை சார்ந்த ராஜபுத்திர பென்களை கூட்டிக்கொடுத்து 'சானக்யத்தனத்தோடு' திருமணம் செய்து வைத்தது யார்? முகலாய மாப்பிள்ளமார்களுக்கு 'மஹா' பட்டமளித்து பரிசுகள் பெற்று மகிழ்ந்தது யார்? அற்ப நில மான்யங்களுக்காக அரசவை ஆலோசகர்களாக இருந்து 'இந்து மதத்தை சார்ந்த பிராமனரல்லாத' குறுநில மன்னர்களையெல்லாம் முகலாயர்களிடம் 'போட்டுக்கொடுத்தும்' 'காட்டிக்கொடுத்தும்' பதவி சுகமனுபவித்தது யார்?
பாபர் காலத்திலிருந்து ஒளரங்கசீப் காலம் வரை அற்பக்கூலிக்காக அவர்களின் படைகளில் வீரர்களாக பணிபுரிந்து முகலாயர்கள் சார்பாக இந்து நாட்டின் மீதெல்லாம் படையெடுத்தது யார்? முதலில் செய்யவேண்டியது என்ன தெரியுமா? ஏறத்தாழ 700 ஆண்டு முகலாயர் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு ஆலோசகர்களாக பனிபுரிந்த 'சாதியினரையும்' மற்றும் அவர்களின் படைகளில் போர்வீரர்களாக பணிபுரிந்த 'சாதியினரையும் ' அடையாளங்கண்டு அந்த வந்தேறிகளை- எட்டப்பன்களை- தேசதுரோகிகளை முதலில் நாட்டைவிட்டு வெளியேற்றுங்கள்.
கஜினி படையெடுப்பு
'நீ ஒரு முறை ஏமாந்தால் ஏமாற்றியவன் குற்றம்; நீ அடுத்த முறை ஏமாந்தால் அது உன் குற்றம்' என்பது முதுமொழி! கஜினி முகம்மதுவை 16 முறை படையெடுக்க விட்டு வேடிக்கை பார்த்தது யார் குற்றம் ? சோமனாதபுரத்தில் இருந்த எல்லோருமே என்ன வாஜ்பாய்க்களா, கஜினிமுகம்மது ஒவ்வொருமுறையும் படையோடு வரும்போது கைக்கட்டி- வாய்பொத்தி வேடிக்கை பார்க்க?

சங்கின் தேசபக்தி: சுதந்திர போராட்டத்தில் அனுவளவு பங்களிக்காமல், ஆங்கிலேயரிடம் சரனாகதி அடைந்து, எட்டப்பன் வேலைப்பார்த்த சங்பரிவார் கும்பல் இப்போது நாட்டுப்பற்றைப்பற்றி உரையாற்றுவது கேட்டு காதுக்கே கூச்சமாக இருக்கிறது. சிறுவனாக இருக்கும்போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை கையைக்கட்டிக்கொண்டு நின்று வேடிக்கை பார்த்ததற்காக கைது செய்யப்பட்ட முன்னாள் இந்திய பிரதமர், தான் சுதந்திர தாகம் கொண்டு பொங்கியெழுந்து இயக்கத்தில் பங்கெடுத்ததாக ஆற்றிய 'வீராவேச' உரையின் அடிப்படையை ஆராய்ந்த பிரபல செய்தி ஊடகம் வெளிக்கொணர்ந்த உண்மை என்ன தெரியுமா? 'வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் நான் பங்கெடுக்கவில்லை ஓரத்தில் நின்று வேடிக்கைத்தான் (!) பார்த்தேன். அதனால் தயவு செய்து என்னை விடுதலை செய்துவிடுங்கள் என்று மன்னிப்பு கடித எழுதிக்கொடுத்த 'கடித நகலை' வெளியிட்டவுடன் (http://www.flonnet.com/fl1503/15031150.htm) வாஜ்பாயும் அவரின் தொண்டரடி-பொடிகளும் வாயை திறக்கவில்லையே! இந்த செய்தி சம்பந்தமாக மேலும் விவாதம் நடத்த வேண்டாம் என்று மேற்கண்ட பத்திரிக்கை நிறுவனத்தை வேண்டிக்கொண்டதும் ஜோதிர்லதா கிரிஜாவுக்கு தெரியாதா?
இந்திய முஸ்லிம்கள், இந்துக்கள் பெருவாரியாக வாழும் இந்நாட்டில் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சலுகைகளை எண்ணிப்பார்த்து இந்துக்களிடம் பெருந்தண்மையாக நடந்துக் கொள்ளவேண்டுமாம் - அடப்பாவிங்களா! மதம் சாதி பெயரால் மக்களை மொட்டையடித்த பண்டாரங்களும் பரதேசிகளும் இந்திய முஸ்லிம்களுக்கு 'அளித்த ' சலுகைகளில் ஒன்றிரண்டையாவது 'திண்ணை' வாசகர்களுக்காக பட்டியலிட்டு காட்டுங்களேன்!.
சங்பரிவாரிடம் 'சலுகை' பிச்சை கேட்டு வாழ, இந்திய முஸ்லிம்களை 'ஏமாளி' தலித்களாகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் கருதாதீர்கள். உரிமையோடும் சுயமரியாதையோடும் வாழ அனுமதியில்லை என்று அறிந்ததும் கண்மூடித்தனமாக பின்பற்றி வந்த இந்து மதத்தையே வீசியெறிந்துவிட்டு இஸ்லாத்தை தேர்ந்தெடுத்த முன்னோர்களின் வழியில் வந்த எங்களுக்கா - உரிமைகளுக்காக போராட தெரியாது?
சொந்த நாட்டிலே, எங்களுக்கான உரிமைகளை ஜனநாயக முறையில் கேட்கவும், போராடவும் தெரியும். உரிமைகளை பெறும் வழிமுறையையும், அதை அடைவதற்கான தைரியத்தையும், போராட்டக்குணத்தையும் இஸ்லாம் தெளிவாக கூறியிருக்கிறது.

இந்திய முஸ்லிம்கள் யார்?
'முகலாயர்கள் செய்த அட்டூழியத்துக்காக முஸ்லிம்களை இந்துக்கள் பழி வாங்கியிருக்க முடியுமாம். இந்துக்களின் சகிப்பு தன்மையின் காரணமாக அவர்கள் பழிவாங்க வில்லையாம்'- முகலாயர்கள் செய்ததற்காக இந்திய முஸ்லிம்களை ஏன் பழிவாங்கவேண்டும்? இந்திய முஸ்லிம்கள் யார்? அவர்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா, அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களா அல்லது முகலாயர்களுடன் படைவீரர்களாக வந்து இங்கேயே தங்கி விட்டவர்களா? உங்களுக்கெல்லாம் புரியும் வகையிலே 'பிழைப்புக்காக ஆடு மாடுகளை ஒட்டிக்கொண்டு கணவாய் வழியாக கள்ளத்தனமாக இந்தியாவில நுழைந்து, பூர்வீகக்குடிகளை மதம், சாதி பெயரில் கூறு போட்டு அடிமையாக்கி அட்டூழியம் செய்து வரும் கயவர்கள் கூட்டம் அல்ல - இந்திய முஸ்லிம்கள்' என்று சுருக்கென சொல்லிவிடலாம். ஆனால் மற்ற வாசகர்களுக்காக கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.
உங்களுக்கு அருகாமையில் வசிக்கும் முஸ்லிம்களின் உடல், நிறம், பழக்க வழக்கம், மொழி மற்றும் வாழ்க்கை முறையை சற்று உற்று நோக்குங்கள். உயர் சாதி இந்துக்களைப் போலல்லாமல் நீங்கள் அன்றாடம் சந்திக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மனிதர்களை அப்படியே பிரதிபலிப்பார்கள். ஏன் அப்படி?

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் அனைத்து முஸ்லிம்களும் 'தீண்டத்தகாதவர்களாக' (உங்களால்) பிற்படுத்தப்பட்டவர்களாக' (உங்களால்) மற்றும் 'மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக' (உங்களால்) முத்திரைக்குத்தப்பட்டு சொந்த மண்ணிலேயே வந்தேறிகளான உயர் சாதியினரால் சுரண்டப்பட்ட முன்னால் இந்துக்கள்தான் - இந்திய முஸ்லிம்கள். கட்டு மீறி போகும் சாதி வெறி கொடுமை, சகிப்புத்தன்மையற்ற வர்ணாஷிரமக்கொள்கை திணிப்பு இவைகளை விரும்பாத - சுமரியாதை, சுதந்திரம் வேண்டி- முன்னாளில் இஸ்லாத்துக்குள் நுழைந்தவர்கள்தான் இந்திய முஸ்லிம்களான நாங்கள்.

ஒரே மதத்தில் இருந்தும் குறிப்பிட்ட சாதியினரை மட்டும் 'புனிதம்' நிறைந்தவர்களாக்கி 'பூ நூல் போட்டு பூசித்து - மற்றவர்களை 'மனிதக்கழிவுகளாக' வருணித்து 'அடிமை விலங்கு பூட்டி' - சாதிக்கொரு நீதி பேசி வந்த (இன்னும் பேசி வரும்) உயர்சாதி வெறியர்களின், செருக்கர்களின் அட்டூழியத்திலிருந்து சமூக விடுதலைப்பெற - அந்நாளில் இஸ்லாத்துக்குள் ஓடி நுழைந்த - தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள்களின் வாரிசுகள்தான் இக்கால இந்திய முஸ்லிம்களான நாங்கள்.

'அவாள்களின்' ஆதிக்கத்தை எதிர்த்து இஸ்லாத்துக்குள் நுழைய எத்தனிக்கும் தலித்துக்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் சட்டத்தின் மூலம் எத்தனை நாட்களுக்கு கட்டிப்போடமுடியும். ஆதிக்கவாதிகளை எட்டி உதைத்து 'முடிந்தால் பூனூல் போடு இல்லையென்றால் 'தொப்பி' போட்டுக்கொள்கிறோம்' என்று இஸ்லாத்தை நோக்கி புறப்படும் சூழ்நிலை உருவாகும், அப்போது ஆயிரக்கணக்கான மீனாட்சிபுரங்கள் ரஹமத் நகர்களாக மாறும். பார்ப்பனர்களால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான ஏகலைவன்களுக்கும், நந்தன்களுக்கும், சம்பூகன்களுக்கும் அடைக்கலம் தந்ததுதான் முகலாயர்களால் இம்மண்ணிற்கு கொண்டுவரப்பட்ட இஸ்லாம் - அதனால்தான் முகலாயர்கள் சென்று பலநூறு ஆண்டுகள் ஆகியும் எங்கள் பாட்டன் முப்பாட்டன்கள் புகுந்த இஸ்லாத்தை விட்டு வெளியேறாமல் உறுதியான கொள்கைபிடிப்போடு இருக்கிறோம் - இருப்போம்.

பெருந்தன்மை யாருக்கு வேண்டும் ?
முஸ்லிம்கள் இந்துக்களிடம் பெருந்தன்மையாக நடந்துக்கொள்ள வேண்டுமாம். நேசத்துடனும் பாசத்துடனும் மாமன் மச்சானாக வாழ்ந்து வந்த இந்து-முஸ்லிம் உறவை கெடுத்தது இன்னும் கெடுத்துக்கொண்டிருப்பது யார் என்று 'மனமுதிர்ச்சியுற்றவர்களுக்கு' தெரியும். நன்றியுனர்வு யாருக்கு வேண்டும் தெரியுமா? மனு போன்ற 'அதீதசாதிப்பற்றுள்ளவர்களை ' தங்களின் மூதாதையர்களை கொண்டவர்களுக்கும் - கொண்டாடியவர்களுக்கும் - சங்கரர்களும், சரசுவதிகளும் (தயானந்த) சொல்கின்ற 'சாதிப்பழிப்பு ' கருத்துக்களுக்கு இன்னும் சாமரம் வீசி வருபவர்களுக்குத்தான் நன்றியுனர்வு வேண்டும்.
மிதிக்கின்றவர்களை துதிக்கின்ற, குட்டி குட்டியே குனியவைத்தவர்களையே தங்களின் முதுகிலே சவாரி செய்ய அனுமதித்திருக்கும் ஏமாளிகளான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்து சமூகத்தினருக்கு - மிதித்தவர்களும், குட்டியவர்களும்தான் நன்றி கூறவேண்டும்.

இந்திய முஸ்லிம்களின் நிலைப்பாடு
இந்திய முஸ்லிம்கள் ஏமாளிகளாக கோழைகளாக 'சூல வழங்கிகள் ' விரட்ட விரட்ட ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் என்றோ, சூடு சொரனை வீரம் சுயமரியாதையெல்லாம் இழந்து அயோத்தி, மதுரா, காஷி என்று கேட்பதையெல்லாம் கொடுத்து தனித்துவத்தையும் இழந்து வாழவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நாங்கள் அடைக்கலம் புகுந்த இஸ்லாம் அநீதியை எதிர்த்து போராடவும் அவசியமானால் போரிடவும் சொல்லியிருக்கிறது, ஆணவத்தோடு கன்னத்தில் அறைந்தவனுக்கு பதிலடி கொடுக்கும்படி இஸ்லாம் எங்களுக்கு சொல்லித்தந்திருக்கிறது.

இந்திய முஸ்லிம்களான நாங்கள் ஏமாற்றுப் பேர்வழிகளிடமும் குழப்பவாதிகளிடமும் ஒருபோதும் அடிபணிய மாட்டோம், மிரட்டலுக்கு இணங்கிப்போக மாட்டோம். நியாயம் எங்கள் பக்கத்தில் இருந்தால் இறுதி மூச்சு வரை போராடுவோம். அது பொது சிவில் சட்டமாகட்டும் இடிக்கப்பட்ட எங்களின் பாப்ரி மஸ்ஜிதாகட்டும். தங்களைப் போன்றவர்களுக்கு பொய்யைக்கூறி சிண்டு முடிக்க மட்டும்தான் தெரியும் ஆனால் உண்மையை இயம்பி உங்களின் சிண்டைப்பிடிக்க தெரியும்.
நன்றி:
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் வாஜ்பாய் பங்கு: http://www.flonnet.com/fl1503/15031150.ht
பற்றி மேலும் அறிய
http://www.flonnet.com/fl1503/15031160.htm (திண்ணையில் ஜோதிர்லதா கிரிஜா (http://www.thinnai.com/?module=displaystory&story_id=20404155&format=html )எழுதிய கட்டுரைக்கு எதிர் விணையாக எழுதியது)